உலகிலேயே முதல் முறையாக அதிவிரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் அதனை போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். உலக அளவில் கொரோனா தடுப்பு ஊசியில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது.
இந்நிலையில் உலகிலேயே முதன்முறையாக 10 லட்சம் பேருக்கு அதிவிரைவாக தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி ஆறு நாட்களில் இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.