அமீரக குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் இன்று முதல் அமீரகம் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய்,சார்ஜா நகரங்களுக்கு திருச்சி சென்னை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு நிபந்தனைகளுடன் இந்தியாவிலிருந்து வருகை புரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய பயணிகள் அமீரகம் அனுமதித்துள்ள தடுப்பூசிகளான பைசர் பயோஎன்டெக், ஸ்புட்னிக் வி, ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனிகா (கோவிஷீல்டு), சினோபார்ம் தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றின் இரண்டு டோசை செலுத்தி இருக்க வேண்டும் எனவும், 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவையும் கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
பரிசோதனை முடிவுடன் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை சான்றையும் வைத்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அதையடுத்து துபாய்க்கு வருகை புரிந்த பிறகு விமான பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதற்கான முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வெளியிடப்படும். இது குறித்த சுற்றறிக்கை, பன்னாட்டு விமான நிலையங்களான சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.