Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக-மருது சேனை கூட்டணி… திருமங்கலம் தொகுதியில் போட்டி…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் மருது சேனை கட்சி போட்டியிட உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிலும் சில காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன. அதன்படி அதிமுக கட்சியில் இருந்து பலரும் விலகிச் சென்று திமுக போன்ற பல கட்சிகளின் கூட்டணி வைத்துள்ளனர். அதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான அமமுக கூட்டணியில் மருது சேனை கட்சி இணைந்துள்ளது. மருது சேனை போட்டியிடுவதற்காக திருமங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ள அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை தொடர்ந்து விமர்சித்து வரும் மருது சேனையின் தலைவர் ஆதிநாராயணன் தேவர் அங்கு போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |