Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா….? ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்ததால் சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தடதாரை கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாச்சிக்குப்பம் கூட்டு ரோடு சாலையில் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட தனியார் நிறுவன ஊழியரான பிரபாகரன் என்பவர் மருந்து கடைக்கு சென்று தேவராஜிடம் சிகிச்சை பெற்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பிரபாகரனின் உடல்நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக அவரை வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரபாகரனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவராஜை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் தேவராஜ் லேப் டெக்னீசியன் படித்துவிட்டு மருந்து கடை வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலி டாக்டரான தேவராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மருத்துவ அதிகாரிகள் அந்த மருந்து கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |