IPL போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலாவதாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து குவித்தது. அதாவது கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 52 பந்தில் 87 ரன்னும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), அபினவ் மனோகர் 28 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 14 பந்தில் 31 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தனர். இதையடுத்து குல்தீப்சென், யசுவேந்திர சாஹல் , ரியான் பராக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
அதன்பின் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் 37 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. ஆனால் பட்லர் அதிகபட்சம் 24 பந்தில் 54 ரன் (8 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயர் 17 பந்தில் 29 ரன்னும் (2 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். பின் பெர்குசன், யாஷ் தயாள் தலா 3 விக்கெட்டும் முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். குஜராத் அணி பெற்ற 4வது வெற்றி இது ஆகும். இதன் வாயிலாக அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி விட்டது. இந்த வெற்றி தொடர்பாக குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியிருப்பதாவது “கேப்டன் பதவியை நான் ரசிக்கிறேன்.
கேப்டனாக இருப்பது என்பது வேடிக்கையான ஒன்றாகும். ஏனென்றால் அது என்னை பொறுப்பேற்கவும், கொடி ஏந்தியவராகவும் இருக்க அனுமதிக்கிறது. அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள் ஆகும். நான் நீண்டநேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்த பழக்கம் இல்லை. ஆனால் இப்போது நீண்டநேரம் ஆடி இருக்கிறேன். ஆகவே தன்னால் கணக்கீடு செய்து துணிச்சலான முடிவை சந்திக்க முடிகிறது. சென்ற ஆட்டத்தில் அது சரியாக அமையாத நிலையில், இந்த ஆட்டத்தில் அதை உறுதி செய்தேன். என் இந்த ஆட்டம் சிறப்பானது, அதற்கு கடினமாக உழைத்தேன்” என்று அவர் கூறினார். குஜராத் அணியானது 6வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணி 2வது தோல்வியைதழுவியது. அந்த அணி அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சை 18ஆம் தேதி எதிர்கொள்கிறது.