சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
சென்னை அருகில் உள்ள சிட்லபாக்கத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிப்பேராணை எண். 10666 / 2019 வழக்கு தொடர்பாகவும் அரசு தலைமைச் செயலாளர் 02.11.2021 மற்றும் 24.11.2021 ஆகிய நாட்களில் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி பின்னர் 01.12.2021 அன்று அரசு தலைமைச் செயலாளர் சார்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் வேல் காடும் வழக்கு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நேற்று வழக்கு விசாரணை செய்தது.
இந்த வழக்குகளுடன் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் நீதிமன்ற ஆணையின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்தது. மேலும் முதன்மை அமர்வு அனைத்து மாவட்டங்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றின் விவரத்தை ஒரு வார காலத்திற்குள் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி இன்று நீர்வளத்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாவட்ட ஆட்சியர் தலைவர்கள் ஆகியோர் உடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் விவரங்கள் அவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விவரங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்து விரிவான அறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நாளைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இதில் எவ்வித சுணக்கமும் காட்டாமல் இரவுபகலாக கணக்கெடுப்பு நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.