நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிப்பெண்கள் கணக்கீடு செய்ய அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுகள் இயக்ககம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது .மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.