நாடு முழுவதும் விளையாட்டை பாடத்திட்டமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் உடற்கல்வி கட்டாய பாடமாக்க பட்டுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் உடற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடம் கட்டாயமாக்கப்பட்டு செய்முறை மற்றும் எழுத்து முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் இரண்டு விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது” என்று அந்தப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.