Categories
மாநில செய்திகள்

அனைத்து தரப்பு மக்களும் சமம்….. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி….!!!

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் தவறாக பேசுவது ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து நடிகை மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத் தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்ததின் பேரில், அவரும் அவரது நண்பரின் பெயரில்  7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி மீரா மிதுன் நண்பர் சாம் அபிஷேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பட்டியலினத்தவர்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை என்றும், நடிகை மீரா மிதுன் பேசும்போது அருகில் இருந்ததாக கூறினார். ஆனால் காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் பேசும்போது, அவர் பேசுவதற்கு உறுதுணையாக அவரது நண்பர் இருந்ததாக வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி நம் நாட்டில் அனைத்து தர மக்களும் சமமானவர்கள் என்றும், எந்த ஒரு சமூகத்தைப் பற்றியும் தவறாக பேசுவது ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்தார். அதன்பிறகு மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |