Categories
தேசிய செய்திகள்

அனைத்து தடைகளையும் தாண்டி…. ‘இந்தியா முன்னேறி வருகிறது’…. PM மோடி…!!!!

அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது என PM மோடி கூறியுள்ளார். இன்றைய சர்வதேச சூழலில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியா மீது திரும்பி உள்ளது. அதிவேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த நாடும் முழு திறனுடன் முன்னேறி வருகிறது. இதற்குப் பின்னால் உள்ள நமது மிகப்பெரிய பலம் நமது அரசியலமைப்பு. சாமானியர்களுக்கான சட்டங்கள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் வரலாறு அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது கிடையாது. அவர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களிலும் போர்களை முன் நின்று நடத்திய மாவீரர்களையும், அவர்களுடைய தியாகங்களையும் சொல்வதே நம்முடைய வரலாறு. ஏனெனில் அந்நிய ஆட்சியாளர்கள் இந்த மண்ணில் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நம் நாட்டின் ஏராளமான மாவீரர்கள் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ந்து தோன்றிய வண்ணம் இருந்திருக்கிறார்கள். வீரத்துடன் போரிட்டு இருக்கிறார்கள். பலரும் தங்களுடைய உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள் என்று அவர் பேசினார்.

Categories

Tech |