Categories
மாநில செய்திகள்

அந்த 17 திட்டங்கள்….. வேற லெவலில் மாறப்போகும் கோவை…. மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!!

கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று 17 திட்டங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. ஆனால் அவற்றில் சில அறிவிப்புகள் கிடங்கில் போடப்பட்டு விட்டன. இதனையடுத்து மற்ற சில திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் சில திட்டங்கள்  ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் இருக்கின்றனர். மேலும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினால் கோவையின் முகமே மாறி வளர்ச்சிகளில் பல அடி தூரம் பாயும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்நிலையில் குறிப்பாக 17 திட்டங்கள் கோவையில் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த 17 திட்டங்கள் எவை என மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். மேலும்  அறிவிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராததால் நாம் நினைவில் இருந்து சென்றிருக்க வாய்ப்புண்டு. இவற்றைத் தான் இனையவாசிகள் தற்போது அரசுக்கு நினைவூட்டத்  தொடங்கியுள்ளனர்.

1. மெட்ரோ;

மெட்ரோ   ரயில் திட்டத்திற்கான விரிவாக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் பல்வேறு புதிய திட்டங்களின் குறுக்கீடானது திட்டத்தை தாமதப்படுத்தி வருகிறது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் கட்டுமான பணி அடுத்த ஆண்டு தொடங்கி வருகின்ற 2027 -ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.

2. கரூர் பசுமைவழிச் சாலை மற்றும் நார்தர்ன் ரிங் ரோடு:.

Feedback infra private limited நிறுவனமானது விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. இந்த அறிக்கைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

3. பொள்ளாச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலை:.

பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறும்.

4. விமான நிலைய விரிவாக்கம்:.

இந்த பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் பணிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றது.

5. கோவை-சத்தியமங்கலம் நான்கு வழி சாலை:.

Feedback intra private limited நிறுவனமானது இதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக அரசு, தனியார் நிறுவனம் என்ற மூன்றும் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தில் செயல்படுகிறது.

6. அவிநாசி ரோடு மேம்பாலம்:

இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நீலாம்பூர் வரை இந்த பணியை நீடிப்பதற்கு அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7. ஆத்திக்கடவு-அவினாசி திட்டம்:.

இந்தத் திட்டத்தில் 98 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. எனவே இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8. வெஸ்டர்ன் ரிங் ரோடு:.

இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது.

9. பில்லூர் திட்டம்:.

இந்தத் திட்டமானது பாம்பிங்  நிலையம், தண்ணீர் சேமிப்பு தொட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பைப் லைன் பதிக்கும் பணிகள்  சென்று கொண்டிருக்கிறது. இது அடுத்த வருடம் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

10. சூலூர் டிஃபன்ஸ் பார்க்:.

இந்த திட்டத்தில் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு  அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

11. சூலூர் விமானப் படைத்தளம் விரிவாக்கம்:.

நிலம் கையகப்படுத்தப்படும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் மந்தகதியில் நடந்து வருவதால் தொடக்கம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

12. மேம்பால பணிகள்:.

உக்கடம், ஜி. என். மில்ஸ், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மொத்தம் 3 பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. இவற்றை விரைவு படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

13. புதிய மேம்பாலங்கள்:.

சிங்காநல்லூர், துடியலூர், சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, லாவ்லே ரோடு, சுந்தராபுரம் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

14. எல்டி  பைபாஸ் விரிவாக்கம்:.

இதற்கான வேலைகளில் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

15. மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ்  பார்க்:

.                 Aarvee associates நிறுவனம் விரிவாக்க திட்ட அறிக்கையை தயார் செய்து வருகிறது. அதன் பின்னர் பணிகள் தொடங்கப்படுகிறது.

16. கோவை ஜங்ஷன் மறு சீரமைப்பு:.

இதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படுகிறது.

17. வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்:

40 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டம் கைவிடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |