தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன் மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 90’களில் முன்னணி நடிகையாக வளம் வந்த சரண்யா பொன்வண்ணன் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித், விஜய் சேதுபதி, தனுஷ், விக்ரம், கார்த்தி, சிம்பு, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் நடிகர் விஜய்க்கு மட்டும் இதுவரை அம்மாவாக நடிக்கவில்லை.
இது குறித்து நடிகை சரண்யா பொன்வண்ணனிடம் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது. அதற்கு நான் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். ஆனால் விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு மட்டும் இதுவரை அமையவில்லை. எனக்கு விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய ஆசை கூடிய விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது என்றார்.