பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பேருந்து நிலையத்திலிருந்து பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ பி.எல் சுந்தரம் தலைமையில் ஊர்வலமாக வந்த ஏராளமான பொதுமக்கள் சத்தியமங்கலம் ரோட்டில் இருக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கப்படும் மனுக்களை நிராகரிக்கின்றனர்.
இதனை உரிய முறையில் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இது குறித்து அறிந்த வருவாய் ஆய்வாளர் அங்கு சென்று இனிமேல் மனுக்களை நேரடியாக சென்று விசாரணை நடத்தி தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க சிபாரிசு செய்யப்படும் என உறுதி அளித்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அப்போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.