Categories
தேசிய செய்திகள்

“அந்த பொண்ணு கொடுத்த சாப்பாட சாப்பிடாதீங்க”…..! குப்பையில போடுங்க…. சமையல்காரரின் கேவலமான செயல்…..!!!!

ராஜஸ்தானில் தலிச் சிறுமி வழங்கிய உணவை தூக்கி எறிய கூறிய சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் உதயப்பூரில் தலித்சிறுமி வழங்கிய மதிய உணவை தூக்கி எறியுமாறு சமையல்காரர் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூர் மாவட்டம் பரோடியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமையல்காரர் லாலா ராம் குருஜார் என்பவர் மதிய உணவு சமைத்துள்ளார். அந்த உணவை தலித் பெண்கள் மாணவர்களுக்கு பரிமாறியுள்ளார். அவர் தலித்சிறுமி பரிமாறிய உணவை தூக்கி எறியுமாறு மாணவர்களிடம் கூறியுள்ளார். சமையல்காரர் அதன் பிறகு மாணவர்களின் அறிவுறுத்தலை கேட்டு அந்த உணவை தூக்கி வீசினர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட சிறுமி தங்களின் குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவர்கள் பள்ளிக்கு வந்து சமையல்காரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையிலும் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் லாலா ராம் குருஜார் தான் விரும்பும் மாணவர்களை அழைத்து எப்போதும் உணவு பரிமாற சொல்லுவார். ஆனால் அன்று ஒரு ஆசிரியர் தலித்சிறுமியை அழைத்து உணவு பரிமாறு கூறியுள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த சமையல்காரன் மதிய உணவை தூக்கி எறியுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் பாகுபாடு காட்டிய சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |