நடிகை தீபிகா படுகோனே தனது வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தீபிகா படுகோனே மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அதில் பல நாட்கள் நான் காலையில் எழுந்திருக்க மாட்டேன். தூங்கிக்கொண்டே இருப்பேன். தூங்குவதின் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்று நினைத்தேன். என்னுடைய பெற்றோர் பெங்களூரில் வசித்தனர்.
ஒவ்வொரு முறை என்னைக் காண வரும் போதும் நான் நன்றாக இருப்பதாக அவரிடம் கூறுவேன். அப்படி ஒரு நாள் அவர்கள் என்னை சந்தித்து விட்டு பெங்களூரு புறப்படும்போது நான் உடைந்து விட்டேன். என்னுடைய அம்மா என்னிடம் உனக்கு ஆண் நண்பர்கள் மூலம் ஏதாவது பிரச்சனையா? இல்லை வேலையில் பிரச்சனையா? என்று கேட்டார் அந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை . ஆனால் எனக்கு பிரச்சனை இருந்தது. என்னை சுற்றி யாருமே இல்லாதது போல் இருந்தது.
என்னுடைய தாய் என் பிரச்சினையை புரிந்து கொண்டார். அப்போது கடவுள் தான் எனக்கு அவர் மூலம் என் பிரச்சனைக்கு தீர்வு காண வைத்தார் என்று எண்ணினேன். சில நேரங்களில் எனக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அவற்றையெல்லாம் கடந்து வந்து விட்டேன். இந்த இடத்தில் என்னுடைய தாய்க்கு நான் நன்றி சொல்ல கடமை பட்டு உள்ளேன். தினமும் காலையில் எழுந்த போது எந்த சிந்தனையும் இல்லாமல் தியானம் செய்யும் வேண்டும். மேலும் மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது ஒரு மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிக சிறந்தது” என்று அவர் தெரிவித்தார்.