அந்தமான், லடாக் பகுதிகளில் இன்று ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருக்கின்ற திக்லிபூர் பகுதிக்கு 20 கிலோ மீட்டர் தென்கிழக்கில் உள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து லடாக், கார்கில் வடமேற்கு விசையில் இன்று காலை 5 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.