Categories
தேசிய செய்திகள்

அந்தந்த மாநில மொழிகளில் இனி தேர்வுகள்…. மாணவர்களுக்கு செம்ம ஹேப்பி நியூஸ்…..!!!!

அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து தமிழ் உட்பட மற்ற மொழிகளில் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கேவிபி ஓய் எனப்படும் கிஷோர் வைத்தியம் புரோட்சகான்யோஜனா திட்டம் வாயிலாக அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுவதால் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே அனைத்து மொழிகளிலும் திறனறித் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த நிலையில், அடுத்த ஆண்டில் மற்ற மொழிகளில் திறனறி தேர்வு நடத்துவதை மத்திய அரசு உறுதி செய்வதை பொறுத்தே இந்த ஆண்டில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்த அனுமதிக்கலாம்.அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |