Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன்குன்று பகுதியில் அனித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் உள் அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அனித் குமார் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துவிட்டார். அதன்பிறகு அனித் குமார் சிறுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனித் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனித் குமாருக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

Categories

Tech |