சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கொத்தனாரை காவல்துறையினர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கொத்தனாரான விஜயகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.