Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த ரயில்…. உடல் சிதைந்து இறந்த புள்ளிமான்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ரயில் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை நேற்று அதிகாலை புள்ளிமான் ஒன்று கடந்து சென்றது. அப்போது சென்னையிலிருந்து விருதுநகர் நோக்கி வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் புள்ளி மான் மீது மோதியது. இதனால் உடல் சிதைந்து புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து புதைத்து விட்டனர்.

Categories

Tech |