தனியார் பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயந்தி மடப்புரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து ஜெயந்தியின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயந்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஜெயந்தியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.