கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் கருப்பையா(65) என்பவர் ரவசித்து வந்துள்ளார். இவர் தனியார் நற்பாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா எட்டூர்வட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த கார் கருப்பையா மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பையாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான முகமது அலி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.