Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிவேகமாக சென்ற கார்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக சாராயம் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலையாம்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் சட்ட விரோதமாக 120 லிட்டர் எரிசாராயத்தை கடத்தியது தெரியவந்துள்ளது. அதன் பின் காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்த்பாபு என்பதும், உடன் இருந்தவர் செல்வம் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் விழுப்புரம் நகரில் விற்பனை செய்ததற்காக புதுச்சேரியிலிருந்து சாராயத்தை கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஆனந்த்பாபு மற்றும் செல்வம் ஆகிய இரண்டு பேரில் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த எரி சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |