Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அதில் என் பெயர் இல்லை” முதியவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமண அழைப்பிதழில் பெயர் அச்சிடாததால் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பாலை பகுதியில் பூமிநாதன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவர் திருமண அழைப்பிதழில் பூமிநாதனின் பெயரை அச்சிடவில்லை. இதனால் பூமிநாதன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூமிநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |