Categories
மாநில செய்திகள்

அதிரவைத்த நீட் தேர்வு முடிவு….. உளவியல் நிபுணர்கள் விடுத்த கடும் எச்சரிக்கை…..!!!!

நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் ராஜஸ்தானி சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்புகளுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். நாடு முழுவதும் 17.64 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதியதில் 9,93.069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் படி ஒட்டுமொத்தமாக 56.30% பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதனைப் போல தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 30 வது இடமும், ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 43வது இடமும் பிடித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இந்நிலையில் உளவியல் நிபுணர்கள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது மாணவர்களை மனம் தளராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. நீட் தேர்வு மூலம் பல மாணவர்களும் மருத்துவ கனவு புதைக்கப்பட்டுள்ளதால் மனம் தளர விட கூடும். அதே நேரத்தில் நம்மை அறியாமலே நாம் தவறான முடிவுகளை எடுத்து விட நேரிடலாம். இதனால் தேர்வு முடிவு வெளியான முதல் 72 மணி நேரம் வரை மிக முக்கியம். ஒருவேளை மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் மனநல நிபுணர்களை சந்தித்து மனம் விட்டு பேசினால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். மேலும் பெற்றோர்களுக்கு மாணவர்களை மனம் தளராதவாறு ஊக்கப்படுத்தி சாதாரண மன நிலைக்கு கொண்டு வர வேண்டும். மாணவர்கள் நீட் தேர்வில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் போனால் அவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |