Categories
மாநில செய்திகள்

அதிரடி கட்டணம் உயர்வு… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக விமானங்கள் மற்றும் பேருந்துகள் என போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது விமான சேவை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் 3000 ரூபாயிலிருந்து 8500 ஆகவும், மதுரை செல்லும் கட்டணம் இரண்டாயிரம் ரூபாயில் இருந்து 6 ஆயிரம் ரூபாயாகவும், திருச்சி செல்லும் கட்டணம் 2, 400 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு விமானப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |