Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

அதிமுக மக்களின் உரிமைகளை…. மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்களின் உரிமைகள் அனைத்தையும் அதிமுக மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டது” என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |