Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிமுக ஆட்சியில் குளறுபடி நடந்து இருக்கு – நெல்லை வியாபாரிகள் கடையடைப்பு…!!

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி வார்டு மறுவரையறையை செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யக்கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் மேலப்பாளையம் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மேலப்பாளையம் பகுதியில் 10 வார்டுகளும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 4 வார்டுகளாக பிரிக்கப்பட்டு இருந்தன.

கடந்த அதிமுக ஆட்சியில் வார்டு மறுவரையறை செய்யும்போது மேலப்பாளையத்தில் உள்ள 10- வார்டுகளை 7-ஆக குறைத்ததுடன் சுற்றியுள்ள 4 வார்டுகளை 8 வார்டுகளாக உயர்த்தியுள்ளது. வார்டு மறுவரையறை செய்ததில் திட்டமிட்டு குளறுபடி செய்துள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனை கண்டித்து மேலப்பாளையத்தில் 1000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். சரியான முறையில் வார்டு மறுவரையறை செய்ய மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Categories

Tech |