Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அரசின் சாதனை… கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமையவிருக்கும் ஆட்சிக்கு கடன் சுமையை விட்டுச் செல்வதுதான் அதிமுகவின் சாதனை என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பன்னீர்செல்வம் பேசுகையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதனால் திமுக அங்கிருந்து வெளிநடப்பு செய்தது. இதனையடுத்து தமிழகத்தின் கடன் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பயிர்க் கடன் தள்ளுபடி காக இடைக்கால வரவு மற்றும் செலவு திட்ட மதிப்பீட்டில் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. 2000 மின்சார பேருந்துகள் உட்பட 12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். மாநிலத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1,35,641 கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அமைய இருக்கின்ற புதிய ஆட்சிக்கு கடன் சுமையால் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியை வைத்து விட்டு செல்வது தான் அதிமுக அரசின் சாதனை ஆக இருக்க முடியும் என குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |