தமிழகத்தில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கார் அருகே வெடிவெடித்த இரண்டு அமமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் இரவு அமைச்சர் கடம்பூர் ராஜு தேர்தல் பரப்புரை செய்ய சென்றிருந்தார். அப்போது அவர் கார் மீது பட்டாசுகள் வீசப்பட்டது. இதனையடுத்து அவரை கொலை செய்ய அமமுக முயற்சிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேலும் நேற்று முன்தினம் இரவு அமமுகவினர் எனது காரை வழிமறித்து பட்டாசுகளை வீசினர். தேர்தல் தோல்விக்கு பயந்து என்னை கொல்ல முயற்சி நடக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு கார் அருகே வெடி வெடித்த இரண்டு அமமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது மேற்கு காவல் ஆணையர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பக வந்தனை சாலையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது கடம்பூர் ராஜு கார் அருகே அமமுகவினர் பட்டாசு வெடித்தது அமைச்சரை கொல்ல முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டார்.