Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் சுமை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி குமாரபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் கட்டிட தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோவிந்தராஜ் கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக கோவிந்தராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |