Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் வன்முறை குற்றங்கள்.. சுவிற்சர்லாந்தில் வெளியான புள்ளிவிவரம்..!!

ஸ்விட்சர்லாந்தில் கடந்த 2019 ஆம் வருடத்தை விட கடந்த 2020 ஆம் வருடத்தில் சுமார் 50% குற்றங்கள் அதிகரித்திருப்பதாக பெடரல் அரசு தெரிவித்திருக்கிறது.

சுவிஸ் பெடரல் அரசாங்கம் இனிமேல் இணையவழி குற்றங்களையும் இணைத்து பதிவு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் வருடத்தில் இணையம் தொடர்பான குற்றங்கள் மேலும் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் வீட்டினுள் நுழைந்து திருடிய சம்பவங்கள் தொடர்பாக சுமார் 32,819 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2019 ஆம் வருடத்தை விட 9.9% அதிகரித்திருக்கிறது.

எனினும் கடந்த 2012 ஆம் வருடத்தில் இருந்து வீடுகளில் திருடப்படும் சம்பவங்கள் சிறிது சிறிதாக குறைய தொடங்கியதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில் e-bike கொள்ளை சம்பவங்கள் 37.5% அதிகரித்திருக்கிறது. மேலும் குடும்பங்களில் அரங்கேறும் வன்முறை தொடர்பான குற்றங்கள் அதிகரிக்கவில்லை.

எனினும் குடும்பங்களில் நிகழும் வன்முறை குறித்து காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட புகார்கள் மட்டும் பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து கடந்த 2020 ஆம் வருடத்தில் மட்டும் சுமார் 1,668 வன்முறை குற்றங்கள் பதிவாகியுள்ளது.

இந்த குற்றங்கள் கடந்த 2019 ஆம் வருடத்தில் நடந்ததை விட 9% அதிகரித்திருக்கிறது என்று பெடரல் அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கின்றனர்.மேலும் கடந்த 2020 ஆம் வருடத்தில் சுமார் 47 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |