திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 114 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 85 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12,515 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 847 சிகிச்சை பெற்று வருகின்றனர்.