Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… அரியலூரில் கோர தாண்டவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 47 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கடந்த 22-ஆம் தேதி ஒரே நாளில் 47 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,232 ஆக அதிகரித்துள்ளது. அதில் 51 பேர் ஏற்கனவே சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளனர். தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4,943 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 238 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |