இந்தியாவில் ஒரே நாளில் 3.50 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறம் இருக்க ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தொற்று காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,19,272 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 2,812 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,73,13,163வாக அதிகரித்துள்ளது.