மன அழுத்தம், டென்ஷன் வேலை பளு ஆகியவற்றை குறைக்கும் இந்த முத்திரையை பயன்படுத்தி பாருங்கள்.
முதலில் விரிப்பில் அமர்ந்து கொண்டு சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றையும் மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனியை தொட வேண்டும். இருகைகளிலும் இந்த முத்திரையை பிடிப்பது அவசியம்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வரும்போது தலைவலி தீரும். மன அழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மன உளைச்சல் மன குழப்பம் ஆகியவற்றில் குறையும். தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.