Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா….? அழுகிய நிலையில் கிடந்த விலங்கு…. வனத்துறையினரின் விசாரணை…!!

அழுகிய நிலையில் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்டோன்மோர் எஸ்டேட் 21-ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தை புலியின் உடலை கைப்பற்றி வனத்துறையின் மனித-வன விலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு கால்நடை மருத்துவர் சுகுமார் சிறுத்தை புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளார். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைப் புலிக்கு 8 முதல் 10 வரை வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக சிறுத்தைப்புலி இறந்திருக்கலாம். அதன் உடல் பாகங்கள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுக்கு பின்னரே சிறுத்தை புலி இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |