Categories
மாநில செய்திகள்

அண்ணா மீது ஆணை…. திமுகவினர் மீது நடவடிக்கை… முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என். உரைரவியுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

அதில் பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம்பெற்றன. நேற்று முன்தினம் ஆளுநர் ஆற்றிய உரையில் முக்கிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.  அதனைத் தொடர்ந்து சட்டசபையை சத்தசபையாக மாற்ற நான் விரும்பவில்லை. எனவே திமுகவினரே தவறு செய்தாலும் அண்ணா மீது ஆணையாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

Categories

Tech |