Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை படிச்ச பாடம் அப்படி….. அதான் இப்படி பேசுறாரு…. சாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து  பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை போல ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்று ஒருமையில் பேசி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றாமல் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு ஊடகத்துறையினரும், அரசியல் தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை அவமரியாதையாக பேசிய அண்ணாமலையை அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் அண்ணாமலை கற்றுக்கொண்ட பாடத்தை அவர் பேசுகிறார் என்றும் தாங்கள் படித்த பாடத்தை தாங்கள் பேசுவதாகவும் கூறியுள்ளார். அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

Categories

Tech |