Categories
அரசியல்

அண்ணாமலையை கைது செய்ய திமுக போட்ட பிளான்…. வெளியான தகவல்….!!!!!!!

கொரோனா  கால கட்டத்தில் கோவிலை திறக்க கோரி நடத்திய போராட்டம் மின்வாரியம் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டு பட்டின பிரவேசத்திற்கு தடை எதிரான குரல் என அண்ணாமலையின்  செயல்பாடுகள் திமுக அரசுக்கு பெரும் பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து தொகுப்பு வாங்கியதில் 77 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்திற்கு கட்டுமான அனுமதிகளில் தாராள செலவில் கிடைப்பதாகவும் கடந்த ஐந்தாம் தேதி அரசுக்கு எதிராக அண்ணாமலை குற்றச்சாட்டுகள் சுமத்தி உள்ளார்.

இது எல்லாமே திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி போன்றோர் மாறி மாறி விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும் அரசுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அண்ணாமலையை எப்படியாவது  சிக்க வைக்க வேண்டும் என திமுகவினர் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு ட்விட்டர் பக்கத்தில் கே அண்ணாமலை ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்துவதாக கூறி திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் தமிழகம் முழுவதும் போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர். இதனை பயன்படுத்தி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அண்ணாமலையை கைது செய்ய திமுக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நுபுர்  சர்மா போலவே அண்ணாமலையும் செயல்பட்டு வருகின்றார். அண்ணாமலையை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்பு போன்ற அமைப்புகளும் தனிப்பட்ட முறையில் பலரும் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னும் அண்ணாமலை தன் பதிவை நீக்கவில்லை வன்கொடுமை சட்டப்படி அவர்  கைது செய்யப்பட்ட பதிவு இது என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலையை கைது செய்தால் அவர் மேலும் பிரபலம் ஆகி விடுவார். மத்திய அரசின் எதிர்வினையை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஒரு தரப்பினரும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வாய்ப்பு கிடைத்தது தவற விடக்கூடாது என மற்றொரு தரப்பினரும் தெரிவிப்பதாக திமுகவினர் கூறுகின்றனர். போலீஸ் அதிகாரிகள் கூட்டணி கட்சித் தலைவர்களிடம் இது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Categories

Tech |