மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று பட்டுசேலை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளன. தற்பொழுது மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றது. இதுபோன்று மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரோபோ சுந்தரி என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய மைசூர் பட்டுப்புடவையில் பொட்டு, நெக்லஸ் மற்றும் வளையல்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ டெல்லியில் தயாரிக்கப்பட்டு பேட்டரியில் இயங்குகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரம் வரை வேலை செய்ய முடியும். தற்பொழுது அங்கு வரும் வாடிக்கையாளர்கள் என்னதான் அறிவியல் வளர்ச்சி பிரமிக்க வைத்தாலும், நாம் கேட்டதை உடனே கொண்டு வரும் ஊழியர்கள் போல் ரோபோவால் ஓடி வர முடியாது. மேலும் இன்முகத்துடன் வரவேற்கும் ஓட்டல் ஊழியர்கள் உணவு பரிமாற இல்லாதது ஒரு குறையாகவே உள்ளது என அங்கு வந்த வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக இந்த ரோபோவை ஓட்டல் நிர்வாகத்தினர் ரூ 2.50 லட்சத்துக்கு வாங்கியதாக தகவல் தெரியவந்துள்ளது.