தென் அமெரிக்காவில் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
தென் அமெரிக்க நாட்டில் பெரு என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்த நகரத்தில் அமைந்துள்ள காஜமாரகா மாகாணத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழையின் காரணமாக இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்பு பணியினர் மீட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல்வேறு இடங்கள் தனித் தனித் தீவாக காட்சியளிக்கின்றன. இதனைத் தொடர்ந்து இந்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் தண்ணீர் வடிந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.