நடிகை கங்கனா ரனாவத் 2022 ஆம் ஆண்டின் புது வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ராகு கேது கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.
உலகிலேயே திருப்பதி கோவிலுக்கு அருகில் மட்டுமே ராகு கேதுவிற்கு ஆலயம் உள்ளது. இந்த ராகு கேது கோவிலுக்கு சென்ற நடிகை கங்கனா ரனாவத் 2022ஆம் ஆண்டின் புது வருட பிறப்பை அங்கு கழித்துள்ளார். மேலும் அவர் கடவுள் பக்தியில் மூழ்கி தனக்காக ராகு கேது கோவிலில் பிரார்த்தனையும் செய்துள்ளார்.
இதுகுறித்த தகவலை கங்கனா ரனாவத் தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அதாவது தான் திருப்பதி ராகு கேது கோவிலுக்கு சென்று வழிபட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கடவுளிடம் நடப்பாண்டில் தனக்கு போலீஸ் புகார்கள் குறைவாகவே வரவேண்டுமென்றும் வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி தனக்கு மிகவும் அதிகமான காதல் கடிதங்கள் நடப்பாண்டில் வர வேண்டுமென்றும் வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.