தக்காளி பாத் செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – அரை கிலோ
அரிசி – 4 கப்
பெரிய வெங்காயம் – 7
இஞ்சி பூண்டு விழுது – 4 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 7
பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, சோம்பு பிரியாணி இலை – தாளிக்க
கரம் மசாலா – 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா – 1 கைப்பிடி அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நெய் மற்றும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கறிவேப்பில்லை, பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின்னர் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி துண்டுகளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
அதனை தொடர்ந்து, மிளகாய்த்தூள், கரம்மசாலா, பிரியாணி மசாலா, தேவையான அளவு உப்பு, மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அரிசியை அதில் சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர், மீதமுள்ள கொத்தமல்லி இலைகள், ஒரு ஸ்பூன் நெய், எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு சேர்த்து, குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தினால், சுவையான தக்காளி பாத் தயார்