தமிழகத்தின் பல மாவட்டங்கைளை சேர்ந்த பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகைக் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு 4 ஆயிரத்து 772 அரசு பேருந்துகளில் 2.43 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.
இதன் காரணமாக சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு 6 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்ற 19ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை முன்பதிவு மற்றும் முன் பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து 6 லட்சத்து 1,288 பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.