பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 6 வருடங்களில் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து பன்மடங்கு உயர்ந்து இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி குவித்த அவரது குடும்ப உறுப்பினர்கள் ரூபாய்.12,700 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது.
அதாவது இஸ்லாமாபாத், கராச்சியிலுள்ள பெரிய பண்ணை வீடுகள், லாகூரில் உள்ள ஒரு பெரிய ரியல் எஸ்டேட் போர்ட்போலியோ மற்றும் பாகிஸ்தானுக்குள்ளும் வெளியிலும் கடந்த 6 வருடங்களில் பஜ்வா குடும்பத்தால் திரட்டப்பட்ட , அறியப்பட்ட சொத்துக்கள், வணிகங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய்.12,700 கோடிக்கும் அதிகம் என அறிக்கை கூறியுள்ளது.