மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் சென்று காவல் நிலையத்தை ஆய்வு செய்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அலுவலகத்திலிருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் சைக்கிளில் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு வையம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அவரின் பாதுகாப்புக்காக இரண்டு போலீஸ் வாகனங்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளது. காலையில் 6 மணிக்கு புறப்பட்டு 8.50 மணியளவில் சூப்பிரண்டு காவல் நிலையத்தை சென்றடைந்தார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் திருச்சி நோக்கி சைக்கிளில் புறப்பட்டுள்ளார். மொத்தம் 120 கிலோ மீட்டர் தூரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சைக்கிளில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.