Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா..! திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ரூ 5,000 க்கு விற்பனை…. விவசாயிகள் கவலை..!!

திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ₹5000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான  தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.. திண்டுக்கல் பூ சந்தையில் இருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் பூக்கள் தினம் தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது..

இந்நிலையில் கடந்த சில தினங்களாக திண்டுக்கல்லில் பெய்து வரும் தொடர் பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் வரத்து திண்டுக்கல் பூச்சந்தைக்கு முற்றிலுமாக குறைந்துள்ளது. மேலும் நாளை முக்கிய முகூர்த்த தினம் என்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்து கிலோ 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல கனகாம்பரம் கிலோ 2500 ரூபாய்க்கும், முல்லைப் பூ 1,500 ரூபாய்க்கும், ஜாதிப்பூ 1000 ரூபாய்க்கும், சம்பங்கி 300 ரூபாய்க்கும், செவ்வந்திப்பூ 130 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 130  ரூபாய்க்கும், வாடாமல்லி 50 ரூபாய்க்கும், செண்டு மல்லி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மல்லிகைப்பூ 5000 ரூபாய்க்கு விற்பனையானாலும் கூட பனிப்பொழிவின் காரணமாக வரத்து இல்லாததால் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்..

Categories

Tech |