தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகங்களை கொண்டவர். இவர் நடிப்பில் அடுத்தடுத்து தமிழில் ஜகமே தந்திரம், மாறன், ஹிந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட் ‘தி கிரே மேன்’ ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படம் முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று வசூலை குவித்து உள்ளது.
இதுவரை ரூ.20 கோடி சம்பளம் வாங்கி வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் அடுத்து நடிக்க உள்ள புதிய படங்களுக்கு ரூ.30 கோடி சம்பளம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் சம்பளத்தை குறைக்கும் படி தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்திந்து வருவதாக கூறப்படுகிறது இதனையடுத்து தனுஷ் கைவசம் தற்போது ‘நானே வருவேன்’, தமிழ் தெலுங்கில் தயாராகும் வாத்தி படங்கள் உள்ளது. இந்த படங்களில் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.