Categories
தேசிய செய்திகள்

“அடுத்த 3-4 தினங்களுக்குள் என்னை கைது பண்ணுவாங்க”…. பேட்டி கொடுத்த மணீஷ் சிசோடியா….!!!!

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் பேசியதாவது “அமெரிக்காவின் மிகப் பெரிய செய்தித்தாள் தனது முதல்பக்கத்தில் தில்லியின் கல்வி மாதிரியை வெளியிட்டு இருக்கிறது. இது இந்தியாவிற்கே பெருமை ஆகும். ஆனால் ஒன்றரை வருடங்களுக்கு முன் கங்கை நதியில் ஆயிரக்கணக்கான உடல்கள் மிதந்த செய்தியை வெளியிட்டது. இது வெட்கக் கேடானது ஆகும். சி.பி.ஐ அதிகாரிகள் என் வீட்டிற்கு நேற்று வந்தனர். அதுமட்டுமல்லாமல் துணைமுதல்வர் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். எனினும் அதிகாரிகள் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். அவர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படிய வேண்டி இருந்தது.

ஆனால் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆகவே அவர்களின் பிரச்சினை கலால் கொள்கை ஊழல் அல்ல. அத்துடன் அவர்களின் பிரச்சனை அரவிந்த் கெஜ்ரிவால். என்னுடைய வீடு, அலுவலத்தில் சோதனை மற்றும் எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் கெஜ்ரிவாலை நிறுத்தவே நடைபெறுகிறது. நான் கெஜ்ரிவாலின் கல்வி அமைச்சர் ஆவார். இதற்கிடையில் நான் எந்த ஊழலையும் செய்யவில்லை. எங்களது கொள்கைகளை வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் பயன்படுத்துகிறோம்.

இக்கொள்கையை மாற்றாமல் இருந்து இருந்தால் தில்லி அரசுக்கு வருடந்தோறும் 10,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அடுத்த 3-4 தினங்களுக்குள் சி.பி.ஐ-அமலாக்கத் துறை தன்னை கைதுசெய்யலாம். இருப்பினும் நாங்கள் பயப்பட மாட்டோம், உங்களால் எங்களை உடைக்க முடியாது. 2024-ம் வருடம் தேர்தல் போட்டி ஆம் ஆத்மிக்கும், பாஜவுக்குமானதாக இருக்கும்” என்று அவர் பேசினார். முன்பாக மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சொல்லி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவ்வழக்கில் 15 போ் மீது முதல் தகவலறிக்கை பதிவுசெய்துள்ள சி.பி.ஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது.

Categories

Tech |